கீற்றில் தேட...



தனக்கான சமூகம்
ஏதுமின்றி தன்னந்தனியாய்
உலாவருகிறது தண்ணீர் தொட்டியில்
அந்தத் தங்க மீன்...

குட்டிபோட்ட பூனையாய்
குறுக்கும் நெடுக்குமாய்
அவசரமாய் உலவிவிட்டு
தன்னைத் தனிமைப்படுத்தியவனின் மீது
மெளனமாய் முனுமுனுக்கிறது
அதன்போக்கில் ஒரு சாபத்தை...

- ராம்ப்ரசாத் சென்னை(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)