தனக்கான சமூகம்
ஏதுமின்றி தன்னந்தனியாய்
உலாவருகிறது தண்ணீர் தொட்டியில்
அந்தத் தங்க மீன்...
குட்டிபோட்ட பூனையாய்
குறுக்கும் நெடுக்குமாய்
அவசரமாய் உலவிவிட்டு
தன்னைத் தனிமைப்படுத்தியவனின் மீது
மெளனமாய் முனுமுனுக்கிறது
அதன்போக்கில் ஒரு சாபத்தை...
- ராம்ப்ரசாத் சென்னை(
கீற்றில் தேட...
சாபம்
- விவரங்கள்
- ராம்ப்ரசாத்
- பிரிவு: கவிதைகள்