கீற்றில் தேட...

pathஇன்னும் ஈரமாய்த்தான் இருக்கிறது, அது!

இரக்கமே இல்லாத வண்டிச் சாரதி

அடித்துச் சாய்த்துவிட்டு

அரவமின்றிப் போய்விட்ட நாழிகையில்

உயிர் கசிந்து தெருவில் ஒழுகியோடிய

அணில் குஞ்சொன்றின் சடலம்

அகற்றப்பட்டும் எஞ்சியிருக்கும்

குருதியின் தடம்போல

இதயத்துள் இன்னும் மிச்சமிருக்கின்றன

நினைவுகளின் சுவடுகள்...

- லறீனா அப்துல் ஹக் (இலங்கை)