இறுகி முறுக்கிக்கொண்ட
என் மரக்கதவுகள்
குளிர்காலம் வந்துவிட்டதை
எனக்கு உணர்த்துகின்றன
அடித்துச்சாத்திய காலங்கள்
கடந்து விட்டன
ஒலி எழுப்பாது
சாத்திக்கொள்ளும் அவை
எவ்வித எதிர்ப்பும்
தெரிவிக்காத என்னையே
பல சமயங்களில்
எனக்கு நினைவுறுத்துகின்றன
ஈரமிருப்பின் எல்லாம்
சுளுவாகிப்போவதை.
- சின்னப்பயல் (