அடர் கருப்பாய்
கிளையிடுக்கில்
விறைத்து வளரும்
நுனியில் சிறுத்து
கூர்மையாய்
குத்தலாம்
சொருகலாம்
கிழிக்கலாம்
குருதி சிந்த
வைக்கலாம்
மறைந்து கிடக்கும்
எப்பொழுதும்
நெரிகட்டிக் கொள்ளும்
நெறிஞ்சிக் குத்தலில்
குத்திக் கொள்வதுதாம்
நூறு சதம்
குத்திவிட்டதென்பதும்
நூறு சதம்
சத்தியமாய் இது
முள் பற்றியக்
குறிப்புதான்.
- மதியழகன் சுப்பையா, மும்பை