
இன்பவாகை சூடிஇல்லத்தில் வெற்றிவலம் வருவதும்
நிமிர்வதும் நீயா, இல்லை நானா? கணிக்கவே இயலாச்
சமருக்குள் ளெனைனுழைத்துக் காதலுதய வேளையில் நீ
"அன்பிலே மிஞ்சியவள் நானே" யென்றுன் முதலம்பை
ஏவித்தான் தொடங்கி நின்றாய் என்னுடன் மல்லுக்கு!
இளைத்தவன் நானில்லை! இறுக்கியுனை அணைத்தேன்- நீயுன்
முத்தத்தின் முத்திரையால் முந்திவிட்டாய் அன்று!
காதலாய் மடலெழுதி மனதைக் களிப்பூட்டிக் காட்டினேன்.
கட்டென்ற தடைதாண்டிக் களம் வந்து வென்றாய் நீ!
வளையலென்றும் வகைவகையாய்ச் சேலையென்றும் உனக்கு
வாங்கித்தந்து விளம்பினேன் வானெட்ட என்னன்பை- எத்துணியும்
திரையிடாத் தேவதையே! உன் கட்டான தேகழகைக்
கண்ணுதலாய் நீகாட்டத் தோற்றேனே நானன்றும்!
உணவங்காடிகளில் அறுஞ்சுவையை மிஞ்சும் பலபண்டச்
சோறுகளில் படைத்தேன் என் அன்பே உயர்வெனெ- நீ
அமிழ்தூறுமுன் வளமுலையின் இளமை மதுச்சுவையில்
மயக்கியெனை மீண்டும் மீண்டும் மூழ்கடித்தாய்!
தொல்லையோ? எல்லைகொள்ளாத் துன்பமோ? துயர்துடைத்துத்
தெம்பளிக்கும் துணையாய் உடனிருக்கப் பறந்துவரும் நான்
உன் கண்ணில் நீர் கண்டால் உதிரம் கொட்டும் அன்பென்றேன்- நீயுன்
கருவறைக்கும்நானே தன்னாட்சிக்கோலோச்ச ஆயுட்கால விருதளித்தாய்
உழைத்தும் பாரினில் உயிர்கொடுத்தும் உனைக்காக்கும்
நானே நாளெல்லாம் உயர்வென்றேன் அன்பிலே!
"உனைப்போலவே உள்ளான்" என்றுலகோர் வியந்திடவே
என்னுருவிலோர் கலைபடைத்து ஏவிநீவிடுத்த அக்கணைக்கு- எக்கணையும்
ஈடாமோ? என்னன்பு அடிபணிந்துன் வெற்றிக்குத் திலகமிடும்!!!!!
- அ.முத்தன், நியூயார்க் (