அறை முழுவதும்
விளையாடித் திரிந்த ஒளி
மெல்ல சோர்வடைந்தது...
நிழல்கள் கிடைத்தவற்றையெல்லாம்
விழுங்கி பருத்துப்போய்விட்டன...
போர்வைக்குள் இழுத்துப்போட்ட
நிழல்களின் தேவதையை நான்
கட்டியணைத்து புரண்டுகொண்டிருந்தது
அந்த நிழல்களுக்குத் தெரியவில்லை...
அவைகள் எப்போதும்போல்
அறை முழுவதும்
தங்களின் தேவதையைத்
தேடிக்கொண்டிருந்தன...
- ராம்ப்ரசாத் சென்னை(