கீற்றில் தேட...

ஈர முத்ததினொரு துளி
மழையெனக் கசிய
பேசும் மௌனம்
பேசிக்கொண்டேயிருக்கிறது
மௌனங்களாகவே !

ஒரு காகிதத்தை
நிர்வாணப்படுத்திய
பெருமூச்சில்
உருகி வழிகிறது
என் காதல்
கவிதை வார்த்தைகள்
ஏதுமின்றி!

- ஆறுமுகம் முருகேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)