வாசித்துக் கொண்டிருந்த
புத்தகத்திலிருந்து
ஒரு
உரையாடல்..துண்டிக்கிறது என்னை..
கடவுளர் படங்களுக்கு
பூக்கள் வைக்கச் சொல்லி வேண்டுகிறாள்..
அது ஒரு உத்தரவு
சலிப்போடு
மக்ஸிம் கார்க்கியைக் கவிழ்த்து..
பறிக்கப்பட்ட மலர்களுக்காகவும்
பூக்களுக்காகவும்..
அஞ்சலி செலுத்த எழுந்து போகிறேன்..
அவளின்
பிரத்யேக கண்ணாடி அலமாரிக்குள்
அடைப்பட்டு
காத்திருக்கும்
கடவுளர்களை நோக்கி..
****
- இளங்கோ (