பெருந்துயர்களையும்
பேரிடர்களையும்
சந்தித்துவிட்ட என்
பயணத்தில்
உயிருக்குள்
கிள்ளிப் போட்ட
நெருப்பாய் சுடுகிறது..
காதலை ஏந்தி செல்வது
---------------------------
ஏந்தி செல்லவோ
இறக்கி விடவோ
நான் யார் காதலுக்கு..
--------------------------
என் கண்ணீர்த் துளிகளைத்
துடைக்க உயிர்த்தெழுவாய் எனில்
ஒருபோதும்
உன்னை மரணம்
அழைத்து செல்ல முடியாது..
-----------------------------
- இவள் பாரதி (