கீற்றில் தேட...

பெருந்துயர்களையும்
பேரிடர்களையும்
சந்தித்துவிட்ட என்
பயணத்தில்
உயிருக்குள்
கிள்ளிப் போட்ட
நெருப்பாய் சுடுகிறது..
காதலை ஏந்தி செல்வது
---------------------------
ஏந்தி செல்லவோ
இறக்கி விடவோ
நான் யார் காதலுக்கு..
--------------------------
என் கண்ணீர்த் துளிகளைத்
துடைக்க உயிர்த்தெழுவாய் எனில்   
ஒருபோதும்
உன்னை மரணம்
அழைத்து செல்ல முடியாது..
-----------------------------

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)